தமிழகத்தில் 18 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Minister Ma Subramanian has stated that 18 people in Tamil Nadu have been confirmed to be infected with delta type corona.

தமிழகத்தில் 18 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பல்வேறு வகை வைரஸாக பரவி வருகிறது. அந்த வகையில் முன்னதாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் காரணமாக தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தமிழகத்தில் தற்போது 18 பேர் இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.