டெல்லி அப்பல்லோ மருத்துவமனை, ஊழியர்கள் மீது தாக்குதல்.!

WATCH: Shocking video of altercation emerges from Apollo hospital in Delhi.

டெல்லி அப்போலோ மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை எழுந்துள்ளது. அதிலும், குறிப்பாக டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி அதிகம் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிக்கு ஐ.சி.யு படுக்கை கிடைக்காததால் உயிரிழந்ததாக நோயாளியின் உறவினர்கள் குற்றச்சாட்டினர். பெண் நோயாளி உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

unknown node

மேலும், மருத்துவமனைக்குள் புகுந்து ஐ.சி.யு வார்டு மற்றும் மருத்துவ உபகாரணங்களையும்  சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளின் உறவினர்கள் நடந்த தாக்குதலில் மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தனர்.