குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முதல்வர் இரங்கல் கடிதம்!

The Chief Minister has sent a letter of condolence to the families of the victims of the Coonoor helicopter crash.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்க்கு முதல்வர் தனித்தனியாக இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்த 11 பேரின் உடல்களும் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவர்களது உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தற்பொழுதும் முதல்வர் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் தனித்தனியாக இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள். ஈடு செய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டு தாங்கள் பலத்தையும் தைரியத்தையும் பெற வேண்டும் என தன் விரும்புவதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.