உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிப் பதவியை விட்டுத்தர வேண்டும் – அமைச்சர்

Minister Palanivel Thiagarajan's speech at the Madurai DMK activists' meeting said that posts cannot be given to one person.

ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது என மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  கூட்டணி கட்சியுடன் சுமூகமாக தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றி முக்கியம் என்பதை இலக்காக நினைத்து பணியாற்ற வேண்டும். ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது. நான் பெற்று, வளர்த்த பிள்ளையாக நினைத்த தகவல் தொழில்நுட்ப அணியை துறந்தேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிப் பதவியை விட்டுத்தர வேண்டும் என தெரிவித்தார். இதனிடையே, மதுரை தெப்பக்குளம் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழக அலங்கார ஊர்தியை பார்வையிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.