#BREAKING: உத்தராகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம்.!

Following the resignation of Chief Minister Trivendra Singh Rawat, Drat Singh Rawat has been appointed as the new Chief Minister.

முதல்வரை பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம்.

இந்தாண்டு இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் வர உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வராக யார் இருக்கப்போகிறார் என்பது குறித்த ஆலோசனை விரைவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த எம்பி தீரத் சிங் ராவத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வரை பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உட்கட்சி பூசலால் பாஜக தலைமை அதிருப்தியில் இருந்ததால் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அக்கட்சியில் எம்எல்ஏக்கள், முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைமையிடம் புகாரளித்தனர். பின்னர் ஜெ.பி.நட்டாவை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தபின், ஆளுநர் பேபி ராணி மயூரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: உத்தராகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம்.!