#BREAKING: நாடாளுமன்றத்தில் கடும் அமளி... இரு அவைகளும் 8வது நாளாக முடக்கம் – சபாநாயகர் எச்சரிக்கை

Both houses of the Lok Sabha and the states were paralyzed for the 8th day today due to the influx of opposition members.

மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் இரு அவைகளும் 8வது நாளாக இன்றும் முடங்கியது.

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து தினந்தோறும் எதிரிக்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாள்தோறும் இரு அவைகளையும் பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில ஆவணங்களையும் எதிரிக்கட்சியினர் கிழித்து எரிந்து, முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் மாண்பை கலங்கப்படுத்தும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்றும் அத்துமீறும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் இரு அவைகளும் 8வது நாளாக இன்றும் முடங்கியது.