#BREAKING: 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 28ம் தேதி முன்பதிவு!! – மத்திய சுகாதாரத்துறை

The Union Health Minister has announced that those above 18 years of age can make reservations from the 28th.

18 வயதுக்கு மேற்பட்டோர் வரும் 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 16ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கிய நிலையில், சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என தகுதி வாய்ந்த மக்களுக்கு முன்னரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் வரும் 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து நாளை மறுநாள் அதற்கான முன்பதிவு தொடங்கு என கூறப்பட்ட நிலையில், வரும் 28ம் தேதி முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node