#BREAKING: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் பலி... 3,79,257 பேர் பாதிப்பு!!

In the last 24 hours, the number of cases has crossed 3 lakh 79 thousand, the highest ever, according to the Ministry of Health.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று முன் எப்போதும் இல்லாத அளவாக 3 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட, இந்த இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,83,76,524 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவைர கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 2,01,187 லிருந்து 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,69,507 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் வீடு திரும்புவார்கள் எண்ணிக்கை 1,48,17,371 லிருந்து 1,50,86,878 ஆக அதிகரித்துள்ளது என்பது மனஉறுதியை அளிக்கிறது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 82.33% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.12% ஆகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30,84,814 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.