தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெறுக – மத்திய உள்துறை செயலாளர்

The federal government has advised state governments to request the required amount of corona vaccines in advance.

தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெறுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில தலைமை செயலாளர்கள் உடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெறுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களில் ஏற்பட்டுள்ள படுக்கை வசதி குறைவு, ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.