#BREAKING: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு..!

AIADMK candidate Pon.Mani Bhaskar has declared victory. Sivagangai district panchayat president election was held today.

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக பொன்.மணி பாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் தலா 8 வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து குலுக்கல் முறை நடத்தப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர்பொன்.மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நான்கு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இன்று மதியம் மூன்று மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.