#BREAKING: தமிழக மாணவர்களை மீட்க 3.5 கோடி நிதி ஒதுக்கீடு..!

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து டெல்லிவரும் தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடியும்,  மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் , சிறப்பு குழுவுக்கான பயணசெலவுக்கு ரூ.1.50 கோடி என  மொத்தம் ரூ.3.50 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு செய்தது.