கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில், கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் போடி, குளியல் மற்றும் துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown node