அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது,லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிகாகோ நோக்கிப் பயணித்த ரயில் மோதி கவிழ்ந்த விபத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சான் ஆன்டோனியோவில் இருந்து சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது ரயில் மோதியது.இதில் கண்டெய்னர் லாரியில் இருந்தவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும்,ரயிலின் 8 பெட்டிகள் கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களும் உயிரிழந்துள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
unknown nodeஅதே சமயம்,இந்த விபத்தில் 3 பேர் மட்டுமே உயிழந்துள்ளதாகவும்,50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக,டிரக்கில் இருந்தவர்களில் ஒருவரும்,ரயிலில் இருந்து இரண்டு பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என மிசோரி மாநில நெடுஞ்சாலை ரோந்து கார்ப்ரல் தெரிவித்துள்ளது.
unknown node