அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

Donald Trump

டொனால்ட் டிரம்ப் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காது பகுதியில் டொனால்ட் டிரம்பிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Donald Trump
Donald Trump [file image]
வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். அதில், போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்தில் இடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரளவர்களுக்கு முன்னாள் நின்று டிரம்ப் பேசி கொண்டு இருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் குண்டு உரசி சென்ற நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. திடீரென துப்பாக்கி சூடு  நடத்தப்பட்ட நிலையில், அங்கு  கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில், டொனால்டு டிரம்ப் காயத்துடன் தப்பிய நிலையில், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப் தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, பிரதமர் மோடி, அமெரிக்கத் குடியரசுத் துணைக் தலைவர் கமலா தேவி,  உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்