நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புஷ்ப கமல் தாஹல், பதவியேற்றார்.
மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்ப கமல் தாஹல், இன்று நேபாளத்தின் புதிய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். புஷ்ப கமல் தாஹல், ஏற்கனவே இரண்டுமுறை நேபாளத்தின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.