கர்ப்பமாவதை தள்ளிப்போடுங்கள் – இளம் தம்பதிகளுக்கு வேண்டுகோள் விடுத்த நாடு!

The Brazilian government has advised young couples to postpone pregnancy until the malignancy of the deformed corona has subsided.

உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற பல நாடுகளில் உருமாறிய கொரோனாவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் இன்றி அந்நாடு திணறி வருகிறது.

இந்நிலையில், கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் பொழுது அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகளும் கொரோனா  பாதிப்பால் உயிரிழக்கும் கோர சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை அங்கு கொரோனவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பிரேசிலில்  உயிரிழந்துள்ள நிலையில், தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர்.

குறிப்பாக கருவுற்ற சில நாட்களிலேயே பெண்கள் கொரோனவால்  பாதிக்கப்படுகின்றனராம். ஏற்கனவே மருத்துவமனைகள் முழுவதிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலில் கர்ப்பிணிகளும் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால் உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையிலும் இளம் தம்பதிகள் கருவுறுதலை தள்ளிப் போடுமாறு பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.