பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் பொருளாதார நிபுணருக்கு அறிவிப்பு.!

NobelPrize

உலக அளவில் மருத்துவத்துறை, இயற்பியல், வேதியியல்,  இலக்கியம், அமைதி , பொருளாதரம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறந்து விளங்கி, சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அவர்களுக்கு  1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சுவீடன் நாட்டு பணம் வழங்கப்படும். ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இந்தாண்டும் அறிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் நோபல் பரிசு மருத்துவத்துறையில் இருந்து ஆரம்பித்து, தினம் ஒரு துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வந்தது. இன்று 2023-24ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலார்கள் மத்தியில் பெண் தொழிலார்களின் முக்கியத்துவத்தின் புரிதலை மேம்படுத்தியதற்காக அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1946 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த கோல்டின் கேம்பிரிட்ஜில், உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி திங்களன்று மருத்துவத்துறை சார்பில் நோபல் பரிசானது  ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 3 செவ்வாயன்று இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 4ஆம் தேதி புதன் அன்று  வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்கள் மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அக்டோபர் 5 வியாழன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக அக்டோபர் 6ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக நர்கேஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவரின் நினைவாக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு , பரிசுத்தொகை அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு தொகை மற்றும் விருது வழங்கும் விழாவானது நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் . அதே போல வரும் டிசம்பர் 10ஆம் தேதி விழா நடைபெற உள்ளது. நோபலின் விருப்பத்தின் பெயரில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
tvk vijay
PM Modi - Delhi opposition leader Atishi
CM STALIN - Boxing
INDvPAK ICC CT 2025
US President Donald Trump - Elon musk
Sexual harassment