கனடா நாட்டில் உண்ணாவிரதம் இருந்த இந்திய மாணவர்கள்! மயங்கி விழுந்த சோகம்!!

கனடா : கனடா நாட்டில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள இந்திய மாணவர்கள் கடந்த மே-24ம் தேதி முதல் உண்ணாவிரதம் வந்துள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் எனக்கூறி உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கனடா நாட்டின் புலம்பெயர்தல் அலுவலக இயக்குநரான ‘ஜெஃப் யங்’ மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் படி மாணவர்களும் உண்ணாவிரதத்தை இடைநிறுத்தம் செய்துள்ளனர். இதற்கிடையில், உண்ணாவிரதம் இருந்த சில மாணவர்கள் நிலைமை மோசமாகி மயங்கி விழுந்துள்ளனர். அவர்களுக்கு தக்க சிகிச்சையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.