வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி உயர்வுக்கு பதிலடி கொடுத்தது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், தனது Truth Social தளத்தில், “சீனா தவறாக விளையாடியது, அவர்கள் பதற்றமடைந்துவிட்டனர் என கூறியுள்ளார். இரண்டு நாடுகளும் மாறி மாறி இந்த சுங்கவரி விதித்த காரணத்தால் இது உலக பங்குச் சந்தைகளை பெரிதும் பாதித்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான S&P […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்து இருந்தார். டொனால்ட் டிரம்ப் இந்த வரி உத்தரவை அறிவித்த உடனே எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் இருவரும் இந்த வரி உத்தரவுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஒட்டாவாவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தில் இருந்து ஒவ்வொரு நாடுகளை பொருத்தும் 49 சதவீதம் வரையில் வரி விதிக்கும் நடைமுறையை அறிவித்தார். இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய […]
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தலைமைத் தேர்தலில், 85.9% வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஜனவரி 7-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான விருப்பம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் உள்ள […]
கனடா : கனடாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். டெராண்டோ பியர்சன் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய டெல்டா 4819 விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். மேலும், அதில் பயணம் செய்த 76 பயணிகள் 4 ஊழியர்கள் என, மொத்தம் 80 பேர் அந்த விமானத்தில் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 18 பேர் காயமும் மூன்று பேர் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது. இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க […]
கனடா : பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து சபா கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து பக்தர்கள் மீது, கம்புகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், கனடாவில் ஹிந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா அதிருப்தியை […]
டெல்லி : கனடாவில் வாழ்ந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு பங்கு உண்டு என கனடா பிரதமர் ட்ரூடோ முன்னதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக முற்றியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப வரவழைத்த இந்தியா, இங்குள்ள கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது. அதன்படி, 6 கனடா தூதரகள் அனைவரும் வருகிற அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை […]
கனடா: கனடாவில் உள்ள சர்ரே எனும் பகுதியில் இந்திய வம்சாவளி நபர் குடியிருப்பு அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019 கனடாவுக்கு வந்தவர் தான் தான் 28 வயதான இந்தியரான யுவராஜ் கோயல். இவர் மிக சமீபத்தில் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றும் இருக்கிறார். இவர் கனடாவில் விற்பனை அதிகாரியாக (Sales Officer) பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஜூன்-7ம் தேதி பகல் சுமார் 8.45 […]
கனடா : கனடா நாட்டில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள இந்திய மாணவர்கள் கடந்த மே-24ம் தேதி முதல் உண்ணாவிரதம் வந்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் எனக்கூறி உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கனடா நாட்டின் புலம்பெயர்தல் அலுவலக இயக்குநரான ‘ஜெஃப் யங்’ மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் படி மாணவர்களும் உண்ணாவிரதத்தை இடைநிறுத்தம் செய்துள்ளனர். இதற்கிடையில், உண்ணாவிரதம் இருந்த சில மாணவர்கள் நிலைமை மோசமாகி மயங்கி […]
Khalistan: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம் எழுப்பப்பட்டதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் சீக்கியர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் கல்சா தின விழா நேற்று ஒட்டாரியோ என்ற பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேச தொடங்கியபோது காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுந்துள்ளது. இருந்தாலும் தொடர்ந்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் சீக்கிய மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எப்போதும் பாதுகாப்பதாகவும், வெறுப்பு மற்றும் […]
இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக […]
கல்வி முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் அனுமதி கட்டணம் உள்ளிட்ட தங்களின் செலவுகளை இரட்டிப்பாக அதிகரித்து அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். அதாவது, கல்வி கற்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் உள்ளிட்ட செலவின் நிதி தேவையை இரட்டிப்பாக உயர்த்தி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் […]
2007இல் பஞ்சாபில் நடைபெற்ற குண்டுவெடிப்பு, சில பிரிவினவாத செயல்பாட்டில் ஈடுபட்டு இந்திய அரசால் தேடப்பட்டு வந்த பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா – கனடா உறவுகள் இடையே கடும் விரிசல் உண்டானது. இந்த விரிசல் உச்சக்கட்டம் […]
கனடாவில் ஒரேநாளில் 10 கத்தியால் குத்தி கொல்லப்பட்டதால் அதிர்ச்சி. கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் நேற்று ஒரேநாளில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர், இந்த கண்முடித்தனமான தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்பின், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் இதுதொடர்பான சில நபர்களை போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு சந்தேக நபர்களை டேமியன் சாண்டர்சன்(வயது 31) மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் (30) என போலீசார் […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், தனது மகன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை, கனடா மிக பாதுகாப்பான நாடு என தனது மகன் கூறி வந்ததாக உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் இது குறித்து பேசியுள்ள […]
கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல். கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்று அவரது தந்தை ஹிதேஷ் வாசுதேவ் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ காவல்துறை கூறியுள்ளது என்றும் இதன் காரணமாக அடுத்த விசாரணை ஏப்ரல் […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கனடா பாதுகாப்பான இடமென்று மகன் கூறியதாகவும், மகனின் மரணத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை எனவும் உயிரிழந்த கார்த்திக்கின் தந்தை வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்தியாவிற்கான கனட தூதரகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தனது மகன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை, கனடா மிக பாதுகாப்பான நாடு […]