இந்த மலையில் வைரம் கிடைக்கிறது! விசாரணைக்கு உத்தரவிட்ட நாகலாந்து அரசு!

An investigation has been launched into the discovery of precious diamonds in a mountainous area in Nagaland.

நாகலாந்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விசாரணைக்கு உதாராவுடப்பட்டுள்ளது.

இன்று சமூக வலைதளங்கள் பலரையும் ஆக்கிரமித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் தான் உலா வருகின்றனர். ஒரு செய்தி ஒருவருக்கு தெரிய வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அதை பதிவு செய்தாலே, பதிவிட்ட சில மணி நேரங்களில்  பெரும்பாலானோருக்கு அந்த செய்தி தெரிய வருகிறது.

அந்த வகையில், நாகலாந்தில் மோன் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியது வச்சிங்  வட்டத்தைச் சேர்ந்த வாஞ்சிங் என்ற ஒரு கிராமத்தில், அதன் மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், நாகாலாந்து மாநில அரசு விசாரணை மேற்கொள்ள புவியியலாளர்கள் உத்தரவிட்டுது.