நாளை இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…!

Default Image

பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் நாளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு  திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முதல்முறையாக இந்தியா வருகிறார். நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை இந்தியா வரும் அவர், வரும் 22ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque
Tamilnadu CM MK Stalin
Indian stock market down