ஏர் இந்தியா விமானத்தில் மாட்டு சாண வரட்டி கொண்டு சென்ற பயணி...!

A passenger carrying a cow dung dryer on an Air India flight.

ஏர் இந்தியா விமானத்தில் மாட்டு சாண வரட்டி கொண்டு சென்ற பயணி.

அமெரிக்காவின் வாஷிங்டன், டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சூட்கேஸ் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அந்த சூட்கேசை சோதனையிட்டபோது அதில் மாட்டுச் சாண வரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

மாட்டு சாணம்,  இன்றும் சில பகுதிகளில், சமையல் எரிவாயுவாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் பல விதங்களில் பயன்படுகிறது. ஆனால், அமெரிக்காயாவில் இந்த மாட்டு சனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், 1929-ம் ஆண்டு முதல் அமெரிக்கா கோமாரி நோய் இல்லாத தேசமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கால்நடைகள் மத்தியில் காணப்படும் கோமாரி நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட மாட்டு சாண வரட்டியை, அதிகாரிகள் அழித்து அதை அப்புறப்படுத்தியுள்ளனர்.