கொரோனாவால் ஒரே நாளில் 420 பலி… இதுதான் அதிகபட்சம்.!

Default Image

ஜப்பான் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 420 இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் நேற்று (வியாழன்) 420 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இதுதான் ஜப்பானில் ஒரு நாளின் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,000-ஐ தொட்டுள்ளது. ஜப்பானில் நேற்று 192,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதன்கிழமையிலிருந்து 24,146 குறைந்துள்ளது.

டோக்கியோவில் புதிதாக 18,372 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமையிலிருந்து 1,871 குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்