நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி அளித்து உதவிய இளைஞர்!

Default Image

நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி அளித்து உதவிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் எனும் கிராமத்தில் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கண்டித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து அங்கேயே முடியாமல் படுத்துள்ளது. இதனை பார்த்த கார் டிரைவர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறங்கி, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்

பின் தனது நண்பர்களுடன் சேர்ந்தது குரங்கை மரத்திலிருந்து இறங்கியுள்ளார். குரங்கு ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்ததும் அதன் நெஞ்சுப்பகுதியில் கையை வைத்து அழுத்தி விட்டுள்ளார். இருப்பினும் குரங்கில் எவ்வித ஆசையும் ஏற்படாததால், குரங்கின் வாயில் தனது வாயை வைத்து ஊதி உள்ளார்.

இதனை அடுத்து குரங்கு மூச்சுவிட தொடங்கியுள்ளது. பின் கண் விழித்து பார்த்துள்ளது. எனவே குரங்கை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்துள்ளார். பின் குரங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்