இரவு 12 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பாக செல்லலாம் – அமைச்சர் ஜெயக்குமார்.!

Default Image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையாரின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கியது அதிமுக மட்டுமே என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், மகாத்மா காந்தி கூறியது போல் தமிழ்நாட்டில் இரவு 12 மணிக்கும் பெண்கள் நகைகளை அணிந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வரலாம் என்று தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்