கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ-க்கு சுதந்திரம் வழங்க வேண்டும்…! மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உததரவு…!

Default Image

கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி நிதி மோசடி வலக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்க கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு விசாரித்தது.

அப்போது கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், சிபிஐ-க்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் எப்பிஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்த்து யார்டு போலீசை போல நவீன வசதிகள் சிபிஐ-க்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், 2020-ம் ஆண்டு டிச.31-ம் ஆண்டு வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, இது தொடர்பான அறிக்கையை சிபிஐ 6 வாரத்தில்  தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அல்லது சிபிஐ இயக்குனர் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay