ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கன அடியாக உயர்வு..!

Default Image

ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமைடைந்ததை தொடர்ந்து கர்நாடகா காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால்  கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், 6,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கபினி அணைக்கு 23,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் 30,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இரண்டு அணைகளில் இருந்தும் தற்பொழுது வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 36,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஓகேனக்கல்லுக்கு இன்று மதியம் 15,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்