மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்பும் விஜயகாந்த்..?

Default Image

கடந்த மாத இறுதியில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனையை  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா உறுதியானது.

பிறகு விஜயகாந்தும், பிரேமலதா விஜயகாந்த் இருவரும்  மூன்று நாள்களுக்கு முன் டிஜ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,  விஜயகாந்த் இரண்டம் கட்ட பரிசோதனைக்காக, கடந்த 6 ஆம் தேதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,  சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்