இரண்டு 13 வயது சிறுமிகளை தலா 10 ஆயிரத்திற்கு விற்ற அவலம்! பாட்டி உட்பட 3 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள், ஒரு நிறுவனத்திற்க்கு வேலைக்கு விற்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 10 ஆயிரத்திற்கு

திருவாரூரை சேர்ந்த இரன்டு 13 வயது சிறுமிகளை தலா 10 ஆயிரத்திற்கு விற்றுவிட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

இவர்களை ஈரோடு பின்னலாடை நிறுவனத்தில் இருந்து மீட்க போலீசார் விரைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள், ஒரு நிறுவனத்திற்க்கு வேலைக்கு விற்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 10 ஆயிரத்திற்கு விறக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குடவாசல் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் அச்சிறுமிகளின் பாட்டி விஜயலட்சுமி உட்படட மேலும் இடைத்தரகர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஈரோடு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வரும் அந்த சிறுமிகளை மீட்க போலீசார் விரைந்துள்ளனர். இன்றைக்குள் அச்சிறுமிகளை மீட்டுவிடுவார்கள் என காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.