தமிழக மீனவர்கள் கைது.!  மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.!

Default Image

இலங்கையில் கைது செய்யப்பட்ட 9 நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் ,  குறிப்பாக, நாகை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது.

அதே போல, கடந்த 10ஆம் தேதி நாகபட்டினம் பகுதி மீனவர்கள்,   இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி,  தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். மேலும், அவர்கள் படகுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் படகை மீட்டு தர நடவடிக்கை எடுக்க கோரியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்