ஸ்டெர்லைட் ஆலையால் தான் தூத்துக்குடி மாசுபாடு அடைந்துள்ளது – மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதில்!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த வருடம் மூடப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையில் தூத்துக்குடியில் மாசுபாடு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமில்லை என்றும் அனல் மின் நிலையங்களே காரணம்  என்று வேதாந்தா தரப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது பேசிய அவர்கள், தூத்துக்குடியில் கடந்த 1996 ம் ஆண்டு முதல் காற்று மாசுபாடு அடைந்து இருப்பதாக தெரிவித்தனர். இது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிரூபிக்கப்பட்டு ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.மேலும்,தூத்துக்குடியில் தற்போது நிலத்தடி நீர் மட்டமும் , காற்றும் பெரும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளாகவும் இதற்கு ஸ்டெர்லைட் ஆளை தன காரணம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்