சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் உள்ளன – அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியிட்டுள்ளது .

இதன் முதற்கட்டமாக, அடுத்த 15 நாட்களுக்கு, 9 வகுப்பு முதல், +2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வகுப்புகளை  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில, பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்றும் அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு தேவையான வகுப்பறைகள் இருக்கிறது என அமைச்சர் விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
Dimuth Karunaratne
Cristiano Ronaldo and Lionel Messi
UP Train Accident
anganwadi kerala shanku
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History