அச்சத்தில் பொதுமக்கள்..! 25 பேரை கடித்து குதறிய வெறி நாய் ..!

Default Image

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் இரண்டு நாட்களாக வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்து உள்ளது.இந்த நாய் சாலையில் தனியாக செல்லுபவர்களை துரத்தி கடித்துக் குதறுகிறது.
அந்த வெறி நாய் கடித்ததில் சிறுவர் முதல் பெரியவர் வரை 25-க்கும் மேற்பட்டோர் கார்மாங்குடி அரசு ஆரம்ப நிலையம் மற்றும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இதில் ஆறுமுகம் என்ற முதியவர் விருத்தாசலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நாய் கால்நடைகளையும் விட்டுவைக்காமல் கடித்து காயப்படுத்துவதால் , கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் கிராம மக்கள் வீட்டிலேயே கட்டிவைத்து உள்ளதாக விவசாயிகள்தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் , மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் , விவசாயத் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் நாயிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள கைத்தடியுடன் செல்கின்றன. அந்த நாயை உடனே பிடிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்