பொதுமக்கள் இனி அவசர பயணம் செல்ல முடியாது! பாஸ் வழங்கலாம் என்ற நடைமுறை நீக்கம் – தமிழக அரசின் தலைமைச் செயலாளர்

இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதானால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர தேவைக்காக வெளியில் செல்கின்ற மக்களால் வெளியில் செல்ல இயலாமல் தவிக்கின்றனர்.
இதனையடுத்து, பொதுமக்களின் அவசர பயணத்திற்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர் பாஸ் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. ஊரடங்கை மீறி அதிகமான மக்கள் சாலைக்கு வருவதால், தற்போது அந்த நடைமுறை நீக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் கூறியுள்ளார்.