நாடு முழுவதும் நிறைவடைந்த நீட் நுழைவுத் தேர்வு..!

இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது.
பல சர்ச்சைகளுக்கு இடையே, நீட் தேர்வுகள் நடந்து முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வர்கள் அனைவரும் தேர்வுகளை எழுதினார்கள். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
கொரோனா பரவலுக்கும் மத்தியில், திட்டமிட்டபடியே நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது இந்த தேர்வு, 3,842 மையங்களில் 15,97 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 14 நகரங்களில் 238 மையங்களில் மொத்தம் 1,17 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.