மாற்றுத்திறனாளி வீட்டுற்கு சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவக்குழு..!

Default Image

தர்மபுரியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள மருத்துவ குழுவினர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மதிவாணன். மாற்றுத்திறனாளியான இவர் பாட்சாபேட்டையில் வசிக்கிறார். இவருக்கு தடுப்பூசி போடும் முகாமிற்கு செல்வதில் சிரமங்கள் இருப்பதாக அந்த ஊர் மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தனது இயலாமையை தெரிவித்த மதிவாணனின் அழைப்பை ஏற்று, அரூர் பகுதியின் மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் தலைமையிலான மருத்துவ குழு ஒன்று அவரது வீட்டிற்கே சென்று உரிய பரிசோதனைகளை செய்து கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.  இதனால், மதிவாணன் தனது கோரிக்கைக்காக வீட்டிற்கு வந்து தடுப்பூசி செலுத்திய மருத்துவக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்