முதலமைச்சர் விஜய்க்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

MP5 அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய 55 மத்திய பாதுகாப்பு படை வீர‌ர்கள் 24 மணி நேர‌மும் பாதுகாப்பு.

Hero Image

சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு மத்திய அரசு இன்று காலை முதல் Z+ பிரிவு உயர் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவின் மிக உயரிய பாதுகாப்பு அடுக்குகளில் ஒன்றான Z+ பிரிவில், சுமார் 55 மத்திய பாதுகாப்பு படை (CRPF) வீரர்கள் 24 மணி நேரமும் முதலமைச்சர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இவர்கள் MP5 அதிநவீன துப்பாக்கிகளை ஏந்தியிருப்பார்கள். மேலும், முதலமைச்சர் பாதுகாப்புக் குழுவில் 10க்கும் மேற்பட்ட NSG (தேசிய பாதுகாப்புப் படை) கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புல்லட் புரூஃப் கார், பைலட் வாகனங்கள், முழுமையான உயர் பாதுகாப்பு வளையம் என முதலமைச்சர் விஜய்க்கு மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சுறுத்தல் அதிகமுள்ள முக்கிய நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த Z+ பாதுகாப்பு, பொது இடங்களுக்குச் செல்லும் போதும் முழுமையான கவசப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

முதலமைச்சராக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உயர் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பாதுகாப்பு முதலமைச்சர் விஜய்க்கு மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக வட்டாரங்கள், “முதலமைச்சரின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், முதலமைச்சருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.