மதுப்பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…இந்த தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு – டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு …!

Default Image

காந்தி ஜெயந்தி,மிலாடி நபியன்று டாஸ்மாக் கடைகள் அடைக்க அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:”வருகின்ற 02.10.2021 அன்று காந்தி ஜெயந்தி (சனிக்கிழமை) மற்றும் 19.10.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று மது விற்பனை இருக்காது.அப்போது,மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் எந்த மீறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்