ஆவின் டேங்கர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம் ! தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை

Default Image

 நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ,பாலை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  பால்வளத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் பால் சப்ளை செய்து வருகிறது.ஆவின் பால் டேங்கர் லாரிகளை இயக்குவதற்கான, ஒப்பந்தம், கடந்த 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது.ஆனால் அரசு ஒப்பந்தத்தை  நீட்டிக்கவில்லை . மேலும் முறைகேடு புகாரில் சிக்கிய நிறுவனம் ஒன்றிற்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியாகி வந்தது.

எனவே  இதனை கண்டித்து  நள்ளிரவு முதல்   ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.இந்நிலையில்  மாவட்ட துணை பதிவாளர்கள், பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை ஆணையர் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.அதாவது,அனைத்து இடங்களிலும் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .சென்னை பண்ணைகளுக்கு தேவையான பாலை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth