காமராஜர் கட்டிய அணையை சீரமைக்க ரூ.10,000 நிதியளித்த மாணவர்கள்!

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.அதில் அம்புலி ஆற்றில் காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட அணை ஓன்று பரம்பரிப்பு இன்றி உள்ளது.அந்த அணையையும் தற்போது அப்பகுதி இளைஞர்கள் சீரமைத்து வருகின்றனர்.

இந்த தூர்வாரும் பணிக்காக பல்வேறு தரப்பினர் தங்களால் முடித்த பண உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கொத்தமங்கலம் மேற்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் மாணவ ,மாணவிகள் தங்கள் உண்டியலில்  சேமித்து வைத்து இருந்த  ரூ 10,000 தூர்வாரும் பணிக்காக கொடுத்து உதவினார்.

இந்த தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கடந்த 70 நாள்களாக அம்புலி ஆறு அணைக்கட்டு ,கொடிக்குளம் ,பெரியகுளம் ஆகிய நீர்நிலையங்களை தூர்வாரி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்