சிவகாசி பட்டாசு விபத்து – 3 பேரை கைது செய்த காவல்துறை…!

Arrest

சிவகாசியில் நேற்று ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம் புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதேபோல், சிவகாசி அருகே மாறனேரி தாலுகாவில் உள்ள கிச்சநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின், போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில், சிவகாசியில் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 13பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வண்டன்ர்.

இந்த நிலையில், எம்.புதுப்பட்டி அருகே ரங்கபாளையத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்