சைதை துரைசாமி ரத்த மாதிரி அனுப்பி வைப்பு..!

Saidai Duraisamy

சைதை துரைசாமி ரத்த மாதிரிகள் இமாச்சலப் பிரதேச ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போனார்.வெற்றி துரைசாமி உட்பட 3 பேர் பயணம் செய்த அந்த கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

வெற்றி துரைசாமியுடன் சென்ற கார் ஓட்டுனர் பலியான நிலையில் அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர்தப்பினார். காணாமல் போன வெற்றி துரைசாமி கண்டுபிடிக்கும் பணி 8-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. வெற்றி துரைசாமி உடைமை செல்போன் காரில் கிடைத்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் இருந்து மூளை பாகங்கள், மூளை திசுக்கள், ரத்த கறைகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்ப்பு..!

சேகரிக்கப்பட்ட திசுக்கள் வெற்றி துரைசாமி உடையது தான் என கண்டறிய பெற்றோர்களின் ரத்த மாதிரி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரத்த மாதிரிகளை போலீஸிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அதை தற்போது இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்தால் அது வெற்றி துரைசாமி மூளை திசுவா என்பது தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்