மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய பெண் அதிகாரியை மிரட்டிய மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களை அஞ்சாமல் மடக்கி பிடித்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில் இந்த மணல் கொள்ளை நாகையை அடுத்த நாகூர் கடற்கரையில், கடல் மணல் கடத்தப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் வந்துது.
unknown nodeஇதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்த கனிமவளத்துறை அதிகாரிகளை கண்டதும், கடத்தல்காரர்கள் தப்ப முயன்றனர்.ஆனால்அவர்களை தடுத்த கனிமவளத்துறை இயக்குனர் , மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். இதனால் அவருடன் மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் கிராம மக்கள் எனக் கூறி கொண்டவர்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
unknown nodeஇந்நிலையில் இந்த தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், மணல் கடத்தல் கும்பல் கடல் மணலை கடத்தி அதை ஆற்று மணல் எனக்கூறி விற்பனை செய்து வந்தது அம்பலமாகியது.இந்நிலையில் கடல் மணல் கடத்தியவர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்.மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர்களை பறிமுதல் செய்ப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரை காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் துணிச்சலுடன் இந்த விவகாரத்தினை கையாண்ட பெண் அதிகாரியின் செயல் பாராட்டுக்குரியதாகும்.அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டாலும் அரசு மணல் கொள்ளையில் கொரைட்டை விட்டு தூங்குவது எதிர்காலத்தில் கனிம வளமே தமிழகத்தில் இல்லாமல் போகும் என்ற சூழலுக்கு வழிவகுக்க போகிறது என்பது மட்டும் தெரிகிறது.
DINASUVADU