ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம்.!

Claiming to be fishing across the border, they said they would not go to sea until the captive fishermen were released.

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், பாட்டில்களால் தாக்கியத்துடன் 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.