இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி…! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்..!

Default Image

கிருஷ்ணகிரியில், இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள புதூர் புங்கணை  ஊராட்சிக்குட்பட்ட, புதூர் கிராமத்தில் உள்ள சதீஷ் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இரண்டு பால் மாடுகளையும் வளர்த்து வருகிறார்.

அவர் வளர்த்த மாடிகளில் ஒன்று தாய்மை அடைந்த நிலையில், கன்று குட்டியை ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. கன்றுக்குட்டி நான்கு கண்கள், இரண்டு வாய் மற்றும் இரண்டு மூக்கு இருந்துள்ளது. இரண்டு தலையுடன் பிறந்த கன்று குட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியப்பட்டு பார்த்து செல்கின்றனர். மேலும் அந்த கன்று குட்டியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்