விவசாயிகள் கவனத்திற்கு..! இன்று தான் கடைசி நாள்…!

தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்  காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.  செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்  காப்பீடு செய்வதற்கான … Read more

#PM-KISAN: விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர்!

விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி. டெல்லியில் நடைபெற்ற கிசான் சம்மான் சம்மேளன் 2022 மாநாட்டில் பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணையாக ரூ.16,000 கோடியை சுமார் 12 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதிலும் இருந்து 13,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 1500 வேளாண் தொடக்க நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு … Read more

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை – மத்திய அரசு!

போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக தற்பொழுது வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட … Read more

விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1,500 நிதியுதவி – அரசு அறிவிப்பு ..!

குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ1,500 வரை நிதியுதவி என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல், மாநில வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் சேவையின் போக்கு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஸ்மார்ட் போன்களை வாங்க விவசாயிகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் விவசாய வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் அரசு … Read more

எனது எருமை பால் கறக்க மறுக்கிறது – காவல் நிலையத்தில் விவசாயி புகார்!

எனது எருமை பால் கறக்க மறுக்கிறது என காவல் நிலையத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பாபுலால் ஜாதவ் எனும் விவசாயி தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .மேலும் தனது எருமை மாட்டிற்கு யாரோ மாந்திரீகம் செய்துள்ளதாகவும், அதனால் தான் அது பால் கறக்க மறுக்கிறது எனவும் தனது கிராமவாசிகள் கூறுவதாவும் அவர் தனது புகாரில் … Read more

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்…! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  இன்று தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு  புதிய … Read more

இவர்கள் இருவரின் பதற்றத்தை தமிழக விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் – ஜோதிமணி எம்.பி

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறேன். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, எம்.பி. ஜோதிமணி … Read more

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் … Read more

7,000 கிலோ வெண்டைக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி…!

7,000 கிலோ வெண்டைக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி. கள்ளக்குறிச்சியில் அதிக விளைச்சல் மற்றும் உரிய விலை கிடைக்காததால்,  விவசாயி ஒருவர் விளைவித்த 7,000 கிலோ வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம்,  சின்னக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊரடங்கு காரணமாக விளைவித்த பொருட்களை, வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாமல், விவசாயிகள் தவித்து வந்தனர். வெளிமாநிலத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்யும் போக்குவரத்து செலவை கூட ஈடு செய்ய இயலாததால், வண்டிப்பாளையத்தை … Read more

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ரூ.19,500 கோடி காணொலியில் விடுவித்தார்…!

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை தொகை ரூ.19,500 கோடியை காணொலியில் விடுவித்துள்ளார்.  பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை விவசாய குடும்பங்களுக்கு 1.38 லட்சம் கோடி நிதி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், … Read more