பொள்ளாச்சி பாலியல் வழக்கு – அக்.6க்கு ஒத்திவைப்பு!

Default Image

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி வாயிலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அவர்களை காவல்துறை ஆஜர்ப்படுத்திய நிலையில், இந்த தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்குமுன் பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு 5 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அதிமுக பிரமுகர் ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை இளம் பெண்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்