பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டில் கைது செய்த போலீசார்.!

Default Image
  • சென்னையில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில், மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
  • இந்த நிலையில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை புவனேஷை விருந்துக்காக கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில் மணமகன் கூட படித்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மணமக்கள் மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டா கத்தியை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதைத்தொடர்ந்து, மண மேடையில் புது தம்பதியினர் மற்றும் மாணவர்கள் பட்டா கத்தியுடன் நடனமும், ஆடியிருக்கின்றார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை புவனேஷை விருந்துக்காக கோயம்பேட்டில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றபோது திருவேற்காடு போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சக மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested