குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

PM MODI

PM Modi  :  பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் பல்லடத்தில் நடைபெற்ற “என் மண் என் மக்கள் யாத்திரை” நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் வந்தடைந்த பிரதமர் மோடி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டினார்.

READ MORE- தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

அதன்படி ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தையும், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், 1,477 கோடியில் முடிக்கப்பட்ட வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை ஆகியவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 7,055.95 கோடி மதிப்பில் துறைமுக பணிகள், 265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 மேம்பாட்டு பணிகள், 124.32 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

READ MORE- மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..! மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உடன் ஆளுநர் ஆர்.என். ரவி ,  மத்திய இணையமைச்சர்  எல்.முருகன், அமைச்சர் எ. வ வேலு,  எம்.பி கனிமொழி மற்றும்  இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் உள்ளிட்டோர் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்