தூத்துக்குடியில் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…! 2 பேர் கைது…!

Default Image

தூத்துகுடித்தில், போல்டன் புரத்தில் உள்ள ஒரு திரையரங்கின் மீது, குடிபோதையில் இருந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர். 

நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவாகி, திரைக்கு வந்துள்ள கர்ணன் திரைப்படம் தற்போது, பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

அப்போது இரண்டு இளைஞர்கள், குடிபோதையில் திரையரங்கிற்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் டிக்கெட் வாங்க சென்ற போது, இருவரும் குடிபோதையில்  இருந்ததால், திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த இளைஞர்கள், தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை திரையரங்கு மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த திரையரங்க உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். திரையரங்க உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்